நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் எடுத்த அதிரடி முடிவால், அணி நிர்வாகமும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆடவர் கிரிக்கெட் உலகத்தில் மிகவும் பிரபலமான அணிகளில் ஒன்றாக இருப்பது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப் போட்டிவரை சென்று இங்கிலாந்து அணியிடம் தோல்வியைத் தழுவியது. இருப்பினும், நியூசிலாந்து அணியை இறுதிப் போட்டிவரை அழைத்துச் சென்றதில் முக்கிய பங்காற்றியவர், அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியசம்சன்.
2019 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் சூப்பர் ஓவர் வரை சென்று, கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நியூசிலாந்து அணி, கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி வரை சென்று தோல்வியைத் தழுவிய நியூசிலாந்து அணி, தற்போது நடந்து வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறிவிட்டது.
இதையும் படிக்க:
‘இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாட வேண்டும்’ – ஸ்டீபன் ஃப்ளெமிங் கருத்து
நியூசிலாந்து அணியின் பரிதாப நிலையைக் கண்டு, அதன் ரசிகர்கள் வேதனையில் ஆழ்ந்திருக்கும் நிலையில், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கேன் வில்லியம்சன் அறிவித்துள்ளார். அத்துடன், 2024-25ஆம் ஆண்டுக்கான நியூசிலாந்து அணி நிர்வாகத்தின் இடைக்கால ஒப்பந்தத்தையும் அவர் நிராகரித்துள்ளார்.
இது குறித்து பேசியுள்ள அவர், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே, கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், “கிரிக்கெட் விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் அணியை முன்னோக்கி நகரத்த உதவுவதற்கு ஆர்வமாக இருக்கிறேன். இருப்பினும், கோடை காலத்தில் வெளிநாட்டில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்பதால், இடைக்கால ஒப்பந்தத்தை நிராகரித்துள்ளேன்.
நியூசிலாந்திற்காக விளையாடுவதை பொக்கிஷமாக கருதுகிறேன். அணிக்கு தொடர்ந்து விளையாட வேண்டும் என்ற எனது விருப்பம் இன்னும் குறையாமல் இருக்கிறது. இருந்தாலும், கிரிக்கெட்டை கடந்து எனது வாழ்க்கை மாறிவிட்டது. எனவே, குடும்பத்தினருடன் நேரம் செலவிட விரும்புகிறேன்” என்று கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
