• Login
Monday, July 7, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அடுத்த 2 ஆண்டுகளில் இந்திய நெடுஞ்சாலைகள் அமெரிக்க தரத்துக்கு நிகராக இருக்கும்… மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி…!

GenevaTimes by GenevaTimes
July 6, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
அடுத்த 2 ஆண்டுகளில் இந்திய நெடுஞ்சாலைகள் அமெரிக்க தரத்துக்கு நிகராக இருக்கும்… மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 06, 2025 6:59 PM IST

மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவின் நெடுஞ்சாலைத் தரம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவுடன் போட்டியிடும் அளவுக்கு உயரும் என்று அறிவித்துள்ளார்.

News18News18
News18

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்திய நெடுஞ்சாலைகளின் தரம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்க தரத்திற்கு இணையாக இருக்கும் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவின் நெடுஞ்சாலைத் தரம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவுடன் போட்டியிடும் அளவுக்கு உயரும் என்று அறிவித்துள்ளார். ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜார்க்கண்டில் மட்டும் ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமான நெடுஞ்சாலைத் திட்டங்கள் நடைமுறையில் இருப்பதாகவும், நாட்டின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதுதான் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டும் அடித்தளம் என்றும் குறிப்பிட்டார்.

அவரது உரையில், “உலகத் தரத்திற்கு இணையான பொறியியல், நீடித்த பயன்பாடு மற்றும் பயணிகளின் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்திவரும் இந்தியா நெடுஞ்சாலை கட்டுமானத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. நவீன சாலைகள் மட்டுமின்றி, டிசம்பர் 2025-க்குள் இந்தியாவின் தளவாடச் செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 14%லிருந்து 9%ஆக குறைக்கப்படும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கும்” என்றார்.

ஜார்க்கண்டுக்கான ரூ.2 லட்சம் கோடி உள்கட்டமைப்பு திட்டங்கள்

ஜார்க்கண்டில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகக் கூறிய அவர், “மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் நான் முழுமையாக உறுதி பூண்டுள்ளேன். ஏற்கனவே ரூ.40,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. மேலும் ரூ.70,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ளன. கூடுதலாக, ரூ.75,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களும் விரைவில் செயல்படுத்தப்பட இருக்கின்றன” என்றார்.

5 டிரில்லியன் டாலர் இலக்கை நோக்கி இந்தியா

பிரதமர் நரேந்திர மோடியின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரக் கனவை நனவாக்கும் நோக்கில், பல முக்கிய பசுமை மற்றும் பொருளாதார வழித்தட திட்டங்களை கட்கரி அறிவித்தார்.

  • வாரணாசி-ராஞ்சி-கொல்கத்தா பசுமை வழித்தடம் – ரூ.36,000 கோடி மதிப்பில், மார்ச் 2028-க்குள் முடிவடையும்.
  • ராஞ்சி-வாரணாசி பொருளாதார வழித்தடம் – ரூ.12,800 கோடி மதிப்பில், ஜனவரி 2028-க்குள் முடிவடையும்.
  • டெல்லி-கொல்கத்தா ஆறு வழித்தடம் – ரூ.31,700 கோடி மதிப்பில், ஜூன் 2026-க்குள் முடிவடையும்.
  • ராஞ்சி-பாட்னா நான்கு வழி வழித்தடம் – ரூ.8,900 கோடி மதிப்பில், டிசம்பர் 2029-க்குள் முடிவடையும்.
  • ராய்ப்பூர்-தன்பாத் வழித்தடம் – ரூ.16,500 கோடி மதிப்பில், ஜனவரி 2028-க்குள் முடிவடையும்.
சுற்றுலா மற்றும் மத தலங்களுக்கான இணைப்பும் வலுப்படும்.

ராஞ்சி ரிங் ரோடு திட்டத்திற்கு ரூ.6,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பாபா பைத்யநாத் கோயில் உள்ளிட்ட முக்கிய மத மற்றும் சுற்றுலா தலங்களை நெடுஞ்சாலை வழியாக சிறப்பாக இணைக்கும் வகையில் பல புதிய திட்டங்களும் தொடங்கப்பட உள்ளன என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 06, 2025 6:56 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

அடுத்த 2 ஆண்டுகளில் இந்திய நெடுஞ்சாலைகள் அமெரிக்க தரத்துக்கு நிகராக இருக்கும்… மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி…!

Read More

Previous Post

காலி சிறைச்சாலைக்குள் வந்து விழுந்த பொதியால் பரபரப்பு

Next Post

புதிய கட்சி தொடங்கினார் எலான் மஸ்க் | Elon Musk launches new party

Next Post
புதிய கட்சி தொடங்கினார் எலான் மஸ்க் | Elon Musk launches new party

புதிய கட்சி தொடங்கினார் எலான் மஸ்க் | Elon Musk launches new party

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin