Last Updated:
தற்போது அவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வர்ணனை செய்து வருகிறார். இதற்காக அவருக்கு கோடிக்கணக்கான ரூபாய் வழங்கப்படுகிறது
கிரிக்கெட் வர்ணனையாளர்களால் அடுத்த கவாஸ்கர் என்று பாராட்டப்பட்ட வீரர் வாழ்வு. கங்குலி மற்றும் டிராவிட்டின் வருகையால் அவரது நிலைமை மாறிப்போனது. தற்போது அவர் கிரிக்கெட் வர்ணனையாளராக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேகரை தான் நாம் இங்கு குறிப்பிடுகிறோம். 60 வயதாகும் அவர் தான் இந்திய அணிக்கு விளையாடிய காலகட்டத்தில் பல்வேறு போட்டிகளில் வெற்றியைத் தேடித்தந்துள்ளார். அதில் குறிப்பிடும் விதமாக ஜிம்பாப்வேயில் ஹராரே மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது 9 மணி நேரமாக அவர் பேட்டிங் செய்து அந்த மேட்சை டிரா செய்ய வைத்தார்.
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் எண்ணற்ற ரன்களை குவித்த அவரால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. ராகுல் டிராவிட் மற்றும் சௌரவ் கங்குலி ஆகியோர் தங்களது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கிய நிலையில் சஞ்சய் மஞ்சுரேக்கரின் கிரிக்கெட் வாழ்க்கை அவரது 32 வயதிலேயே முடிவுக்கு வந்தது.
தான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது 32-வது வயதிலேயே சஞ்சய் மஞ்சுரேக்கர் அறிவித்தார். தற்போது அவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வர்ணனை செய்து வருகிறார். இதற்காக அவருக்கு கோடிக்கணக்கான ரூபாய் வழங்கப்படுகிறது.
சமீபத்தில் அவர் தனது சுயசரிதையான இம்பெர்ஃபெக்ட் என்ற புத்தகத்தை வெளியிட்டு இருந்தார். இந்திய அணிக்காக 111 சர்வதேச போட்டிகளில் சஞ்சய் மஞ்சுரேக்கர் விளையாடி இருக்கிறார். 1992 ஆம் ஆண்டு இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியை நெருங்கியது.
இந்த போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தால் சஞ்சய் மஞ்சுரேக்கர் அணியை டிரா செய்ய வைத்தார். ஹராரேயில் நடந்த இந்த போட்டியில் ஜிம்பாப்வே முதல் இன்னிங்ஸில் 456 ரன்கள் குவித்தது. இதன் பின்னர் இந்திய அணி பேட்டிங் தொடங்கிய போது அசாருதீன், ரவி சாஸ்திரி, டெண்டுல்கர் உள்ளிட்ட வீரர்கள் குறைந்த ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
5 விக்கெட்டுகளுக்கு 101 ரன்கள் எடுத்து இந்திய அணி தடுமாறியது. அதன் பின்னர் களம் இறங்கிய சஞ்சய் மஞ்சுரேக்கர் 9 மணி நேரமாக பேட்டிங் செய்து அணியை 300 ரன்கள் தாண்ட வைத்தார். அவர் 422 பந்துகளை எதிர்கொண்டு சதம் அடித்தார்.
July 13, 2025 6:54 PM IST


