Last Updated:
இந்தியா ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் டெல்லியில் புறா எச்சங்கள் விழுந்ததால் போட்டி இருமுறை தடைபட்டது.
டெல்லியில் நடைபெற்ற இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரின்போது புறா எச்சங்கள் விழுந்தததால் அடுத்தடுத்து இரு முறை போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
“இந்தியா ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன்” தொடர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் பிரணாய், சிங்கப்பூரின் லோ கீன் யூ ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
அப்போது அடுத்தடுத்து இரு முறை பறவை எச்சங்கள் விழுந்ததால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் லோ கீன் 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். ஏற்கனவே, காற்று மாசுபாட்டால் பேட்மிண்டன் போட்டி விளையாடுவதற்கான ஏற்ற இடமில்லை என கூறி இந்த தொடரில் இருந்து, டென்மார்க் வீரர் ஆண்டர்ஸ் ஆன்டன்சென் (Anders Antonsen) விலகினார்.
இந்நிலையில், இதேபோன்று உலக சாம்பியன்ஷிப் போட்டி போன்ற முக்கிய நிகழ்வுகளை டெல்லியில் நடத்துவதற்கு முன்னதாக உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு மைதானத்தின் நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று டென்மார்க் வீராங்கனை மியா பிளிச்ஃபெல்ட் வலியுறுத்தினார். மேலும் அழையா விருந்தினராக பேட்மிண்டன் போட்டியை காண குரங்கு வந்ததும் சர்ச்சையானது. தற்போது புறா எச்சத்தால் இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி தடைபட்டது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.


