சிங்கப்பூர்:டோவர் சாலையில் பறக்கும் ட்ரோன்களுக்கான மற்றொரு புதிய இடம் திறக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு அருகில் அமைந்துள்ள இந்த புதிய இடமானது ஒரு கால்பந்து மைதானத்தின் அளவு உள்ளது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஆளில்லா விமானங்களை பறக்க அனுமதி கோரி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒதுக்கப்பட்ட இந்த புதிய இடமானது விமானத்துறை மேன்மேலும் வளர்ச்சி அடைய உதவும் பாதைகளுக்கு வழிவகை செய்யும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஆய்வாளர்கள் மற்றும் இளைஞர்கள் போன்றோர் பாதுகாப்பான இடத்தில் வானூர்திகளை செலுத்துவதன் மூலம் அனுபவத்தைப் பெறலாம்.அதற்கு வழிவகை செய்வதில் மகிழ்ச்சி அடைவதாக போக்குவரத்து அமைச்சர் சீ ஹாங் டாட் தெரிவித்தார்.

