Last Updated:
SBI சேலரி அக்கவுன்ட் வைத்திருக்கும் அக்னி வீரர்கள் எந்தவிதமான அடமானம் அல்லது ப்ராசஸிங் கட்டணங்கள் இல்லாமல் 4 லட்சம் ரூபாய் வரையிலான தனிநபர் கடன்களைப் பெறலாம் என்பதை வங்கி அறிவித்துள்ளது.
இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அக்னி வீரர்களுக்காக ஒரு சிறப்பு தனிநபர் கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தெரியாதவர்களுக்கு, அரசு நடத்திவரும் அக்னி பாத் ராணுவ திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் இளைஞர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
இந்த புதிய கடன் திட்டமானது அக்னி வீரர்களின் குறுகிய கால சேவை சமயத்தில், அவர்களுக்கான பொருளாதார ஆதரவு வழங்குவதற்கும், வலுவான பொருளாதார எதிர்காலத்தை அமைப்பதற்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
4 லட்ச ரூபாய் வரையிலான கடன்கள்: அடமானம் தேவை இல்லை
SBI சேலரி அக்கவுன்ட் வைத்திருக்கும் அக்னி வீரர்கள் எந்தவிதமான அடமானம் அல்லது ப்ராசஸிங் கட்டணங்கள் இல்லாமல் 4 லட்சம் ரூபாய் வரையிலான தனிநபர் கடன்களைப் பெறலாம் என்பதை வங்கி அறிவித்துள்ளது. இந்த கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் என்பது அக்னி பாத் சேவையின் கால அளவோடு பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கல்வி, திறன் மேம்பாடு அல்லது சேவையின் போதோ / சேவைக்கு பிறகோ ஒரு சிறிய தொழில் ஆரம்பிப்பது போன்ற விஷயங்களுக்கு முதலீடு செய்ய திட்டமிடும் அக்னி வீரர்களுக்கு ஏற்ற வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
ராணுவ வீரர்களுக்கான சிறப்பு குறைவான வட்டி விகிதம்:
இந்த கடனுக்கு SBI வெறும் 10.50 சதவீத வட்டி விகிதத்தை வழங்க உள்ளது. இந்த சிறப்பு வட்டி விகிதமானது அனைத்து ராணுவ வீரர்களுக்கும் செப்டம்பர் 30, 2025 வரை கிடைக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு குறுகிய காலகட்டத்தில் குறைந்த செலவில் கடன் பெறுவதற்கான வாய்ப்பை இராணுவ வீரர்கள் பெறுகின்றனர்.
கடனோடு சேர்த்து SBI இலவச காப்பீட்டு பலன்களையும் வழங்குகிறது. இதில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தனிநபர் விபத்து காப்பீடு, ஒரு கோடி ரூபாய்க்கான விமான விபத்து காப்பீடு மற்றும் நிரந்தர உடல் ஊனத்திற்கு (பாதி அல்லது முழுமையாக) 50 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டை வழங்குகிறது. இந்த கூடுதல் பலன்கள் அக்னி வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு மன நிம்மதியை வழங்கும்படி இருக்கிறது.
August 18, 2025 8:49 PM IST


