Last Updated:
Ahmedabad Plane Crash Black Box | அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியை அமெரிக்காவிற்கு அனுப்பி தகவல்களை மீட்டெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியை, அமெரிக்காவிற்கு அனுப்பி தகவல்களை மீட்டெடுக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 12 ஆம் தேதி அகமதாபாத்தில் போயிங் ரக ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான நிலையில், 2 நாட்களுக்கு பிறகு கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், விமான விபத்திற்கான காரணத்தை கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் கருப்பு பெட்டி, மிகவும் சேதமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், டெல்லியில் உள்ள விமான விபத்து புலனாய்வு அமைப்பினால் கருப்பு பெட்டியில் உள்ள தகவல்களை மீட்டெடுப்பதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, அமெரிக்காவில் உள்ள தேசிய போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பிற்கு கருப்பு பெட்டியை அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் உள்ள அந்த அமைப்பு, கருப்பு பெட்டியில் உள்ள தகவல்களை மீட்டெடுத்து, இந்தியாவிற்கு வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் விமான விபத்தில் இங்கிலாந்தை சேர்ந்த 53 பேர் உயிரிழந்த நிலையில், அந்நாட்டை சேர்ந்தவர்களும் விசாரணையை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
June 19, 2025 11:44 AM IST


