மூவார்: வியாழக்கிழமை (ஜூன் 18) அன்று ஃபோர்க்லிஃப்ட் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சிக்கிக்கொண்ட பட்டறை உரிமையாளர், எதிர்பாராத விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பக்ரி தொழிற்பேட்டையின், பத்து 7இல் உள்ள ஒரு பட்டறையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக முவார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் ஷரிசல் மொஹ்தார் கூறினார். மேலும், இந்தச் சம்பவத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் இன்னும் விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
காலை 9.32 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து எங்களுக்கு அவசர அழைப்பு வந்தது. எங்கள் நிலையத்திலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ள அந்த இடத்திற்கு எங்கள் வீரர்கள் காலை 9.34 மணிக்கு வந்தடைந்தனர் என்று அவர் கூறினார். பட்டறையின் மேற்பார்வையாளர் ஒருவரின் உதவியுடன், மீட்புக் குழுவினர் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி உயிரிழந்தவரை மீட்டதாக ஷரிசல் தெரிவித்தார். உயிரிழந்தவர், பட்டறையின் உரிமையாளரான 37 வயது புய் வெய் ஹான் என அடையாளம் காணப்பட்டார். சுகாதார அமைச்சகத்தின் மருத்துவக் குழுவினர் அவரை இறந்துவிட்டதாக அறிவித்தனர் என்று அவர் மேலும் கூறினார்.
மூவார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஏழு தீயணைப்பு வீரர்களுடன், செயல்பாட்டுக் கட்டளைத் தளபதி மூத்த அதிகாரி I மிஷோலிஃபட்சில் முகமது தலைமையிலான நடவடிக்கை காலை 10.07 மணிக்கு முடிவடைந்ததாக ஷரிசல் தெரிவித்தார்.




