உலகக் கோப்பை டி20 இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதினால் ஆட்டம் சுவாரசியமாக இருக்கும் என்று அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டிராவிட் கூறியுள்ளார்.
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை 20 அணிகள் களம் கண்டுள்ளன. ஏ,பி,சி,டி என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற தனது முதல் போட்டியில் இந்திய அணி அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியை இரு நாடுகளின் ரசிகர்களையும் கடந்து, சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளார்கள்.
பாகிஸ்தான் மற்றும் இந்திய அணியை பவுலிங்கில் ஒப்பிடும் போது ஏறக்குறைய இந்தியாவுக்கு சமமான திறமையான பவுலர்கள் அந்த அணியில் இருக்கின்றனர். ஆனால் பேட்டிங் வரிசையில் பாகிஸ்தான் மிகவும் பலவீனமாக காணப்படுகிறது.
எனவே இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு மிகவும் அதிகம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதினால் ஆட்டம் சுவாரசியமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க – டி20 உலகக் கோப்பை: அமெரிக்காவுடன் மோதும் பாகிஸ்தான் – யாருக்கு வாய்ப்பு?
50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவை ஆஸ்திரேலியா பைனலில் வீழ்த்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 20 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்ற இந்திய அணி கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடினால் அந்த ஆட்டம் மிகவும் சுவாரசியமாக அமையும் என்று தெரிவித்துள்ளார் டிராவிஸ் ஹெட்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)