• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஃபேன்சி வெடிகள் தட்டுப்பாட்டால் சிவகாசியில் பட்டாசு விலை அதிகரிப்பு – பொதுமக்கள் ஏமாற்றம் | Firecracker price hike in Sivakasi

GenevaTimes by GenevaTimes
October 30, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
ஃபேன்சி வெடிகள் தட்டுப்பாட்டால் சிவகாசியில் பட்டாசு விலை அதிகரிப்பு – பொதுமக்கள் ஏமாற்றம் | Firecracker price hike in Sivakasi
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிவகாசி: சிவகாசியில் உற்பத்திக் குறைவால் தட்டுப்பாடு ஏற்பட்டு தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பே பட்டாசுகள் விற்பனை ஆகின. இதில் விலையும் அதிகரித்த நிலையில் விரும்பிய பட்டாசுகள் கிடைக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 1,080-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு தீபாவளி பட்டாசு விற்பனை மும்முரமாக நடைபெற்றதால் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் இருந்த 95 சதவீதத்துக்கும் அதிகமான பட்டாசுகள் விற்றுத் தீர்ந்தன. இதனால், சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் இந்த ஆண்டு தீபாவளிக்கான உற்பத்தி முன்கூட்டியே தொடங்கியது.

அதிகாரிகளின் தொடர் ஆய்வு நெருக்கடி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், சிறு பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தம், தொடர்மழை, அடுத்தடுத்த விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பட்டாசு உற்பத்தி 30 சதவீதம் வரை பாதிக்கப்பட்டது.

சிவகாசி – சாத்தூர் சாலையில் உள்ள பட்டாசு கடையில் விற்றுத்

தீர்ந்ததால் காலியாக உள்ள ரேக்குகள்.

இந்த ஆண்டு நவராத்திரி விழாவும், தீபாவளியும் நெருங்கி வந்ததால் வடமாநிலங்களுக்கு அதிக அளவிலான பட்டாசுகள் அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே தற்காலிக பட்டாசு கடைகளுக்கான உரிமம் வழங்கப்பட்டதால் பட்டாசுகள் வெளியூர்களுக்கு முன்னதாகவே விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 2,500-க்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனைக் கடைகளில் கடந்த 2 வாரங்களாக பட்டாசு விற்பனை மும்முரமாக நடைபெற்றது. தீபாவளிக்கு இரு நாட்களுக்கு முன்னதாகவே தட்டுப்பாடு காரணமாக பெரும் பாலான கடைகளில் பட்டாசுகள் விற்றுத் தீர்ந்தன. இதனால் கடைசி 2 நாட்களில் பட்டாசுகள் விலை 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. விலை உயர்ந்தபோதும் விரும்பிய பட்டாசுகள் கிடைக்காததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.



Read More

Previous Post

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் இதோ!

Next Post

சீனாவுக்கு லட்சக்கணக்கில் கழுதைகளை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

Next Post
சீனாவுக்கு லட்சக்கணக்கில் கழுதைகளை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

சீனாவுக்கு லட்சக்கணக்கில் கழுதைகளை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin