ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அணிகள் மற்றும் வீரர்கள் மட்டுமின்றி மைதான பணியாளர்களுக்கும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பரிசு தொகையை அறிவித்துள்ளார். சமூக வலைதள பக்கங்களில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சுமார் 2 மாதங்களாக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று சென்னையில் நிறைவு பெற்றது. நடந்து முடிந்த 17 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் பேட் கமின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டியில் ஐதராபாத்தை மிக எளிதாக வீழ்த்தி கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. 2012, 2014 ஆண்டுக்கு பின்னர் இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது கொல்கத்தா அணி.
கோப்பையை வென்ற கொல்கத்தா அணிக்கு ரூ. 20 கோடியும், ஃபைனலில் தோல்வியடைந்த ஐதராபாத் அணிக்கு 12.50 கோடி ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது. இதனை தவிர்த்து, தொடர் நாயகன், ஆட்டநாயகன், அதிக ரன்கள் குவித்த வீரர், விக்கெட்டுகளை எடுத்த வீரர் உள்ளிட்ட பிரிவுகளில் பரிசுத் தொகைகள், விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே மைதான பணியாளர்களுக்கும் தற்போது பிசிசிஐ ஊக்க தொகையை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதன் செயலாளர் ஜெய் ஷா தனது சமூக வலைதள பக்கங்களில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க – ஹர்திக் பாண்டியா – நடாஷா தம்பதி விவாகரத்து செய்கிறார்களா? – பின்னணி என்ன?
இதன்படி சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத், ஜெய்பூர் உள்ளிட்ட 10 முக்கிய மைதானங்களுக்கு 25 லட்ச ரூபாய் பரிசு தொகையும், தர்மசாலா, கவுகாத்தி மற்றும் விசாகப்பட்டினம் மைதானங்களுக்கு தலா 10 லட்ச ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The unsung heroes of our successful T20 season are the incredible ground staff who worked tirelessly to provide brilliant pitches, even in difficult weather conditions. As a token of our appreciation, the groundsmen and curators at the 10 regular IPL venues will receive INR 25…
— Jay Shah (@JayShah) May 27, 2024
மைதான ஊழியர்களையும் நினைவுபடுத்தி அவர்களுக்கு பிசிசிஐ பரிசு தொகையை அறிவித்திருப்பதை கிரிக்கெட் ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் வரவேற்று பாராட்டு தெரிவித்துள்ளனர்.
.