• Login
Monday, May 19, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மலேசியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்! வெளியான புகைப்படங்கள்

GenevaTimes by GenevaTimes
March 1, 2024
in மலேசியா
Reading Time: 1 min read
0
மலேசியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்! வெளியான புகைப்படங்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மலேசியாவின் சென்டுல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இரண்டு இலங்கையர்கள் இந்த கொலைகளை செய்திருக்கலாம் என மலேசிய பொலிஸார் சந்தேகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கோலாலம்பூர் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

சென்டுல் பகுதியிலுள்ள இலங்கை தம்பதியருக்கு சொந்தமான வீடொன்றில் நேற்றிரவு (22) இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

குறித்த வீட்டில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த தம்பதியின் 20 வயதுடைய மகனும், இரண்டு இலங்கையர்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

சுமார் 02 நாட்களுக்கு முன்னர் குறித்த வீட்டுக்கு மேலும் இரு இலங்கையர்கள் வந்திருந்த நிலையில், அவர்கள் இந்தக் கொலைகளை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மலேசிய பொலிஸார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அயலவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், வீட்டை சோதனை செய்த பொலிஸார், மூவரின் சடலங்களையும் கண்டெடுத்துள்ளதுடன், இரண்டு இலங்கையர்களின் புகைப்படங்களை பொலிஸாரால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்! பொலிஸ் விசாரணையில் வெளியான புகைப்படங்கள் | Sri Lankans Brutally Murdered Abroad

இந்த கொலை சம்பவம் தொடர்பில் மலேசிய பொலிஸார் அந்நாட்டிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

40 வயதுடைய இலங்கைத் தம்பதிகள் வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளதுடன், சம்பவத்தில் பலியான மூன்று பேரில் ஒருவர், 20 வயது திருமணமான தம்பதியின் மகன் என்றும் செந்தூல் பொலிஸ் தலைமையகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

.மேலும்,சந்தேக நபர்களின் இருப்பிடம் பற்றிய தகவல் தெரிந்தவர்கள், கோலாலம்பூர் பொலிஸ் செயல்பாட்டு அறையை 03-21460584/0585 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறும் அல்லது விசாரணைக்கு உதவ அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்” என்று அறிவுறத்தியுள்ளது.

Read More

Previous Post

ரூ.32 லட்சம் கோடி சொத்து மதிப்பு… தேடி வருபவர்களுக்கு தங்கக் கட்டி பரிசு… யார் இந்த ‘தங்க’ ராஜா?

Next Post

கருத்து வேறுபாடு காரணமாக தனது தாயை காலணி மற்றும் சுத்தியால் அடித்து கொன்ற மகன்!!

Next Post
கருத்து வேறுபாடு காரணமாக தனது தாயை காலணி மற்றும் சுத்தியால் அடித்து கொன்ற மகன்!!

கருத்து வேறுபாடு காரணமாக தனது தாயை காலணி மற்றும் சுத்தியால் அடித்து கொன்ற மகன்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin