பொன்னமராவதி அருகே மறவாமதுரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம்
மறவாமதுரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஏழாமாண்டு ஆண்டு விழா,விளையாட்டுப்போட்டி,புரவலர் சேர்க்கை என முப்பெரும் விழா நடைபெற்றது.மறவாமதுரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர்கள் ராமதிலகம், இலாஹிஜான், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் மீனாட்சி மணிகண்டன்,பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மீனாட்சி,துணைத் தலைவர் மாலதி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.வட்டார வள மேற்பார்வையாளர் (பொ) சிவக்குமார்,ஊராட்சி மன்றத்தலைவர் அடைக்கன், சடையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முத்து,ஒன்றியக்குழு உறுப்பினர் பழனியாண்டி அம்பலம்,ஒய்வு பெற்ற ஆசிரியர் கருத்தசாமி,ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சூர்யா ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.