பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதை இந்திய அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வென்றுள்ளார். அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ஒவ்வொரு மாதங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வீரர்களுக்கு ஐசிசி விருது வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால், இலங்கை அணியின் பதும் நிசாங்கா, நியூசிலாந்து அணியின் வில்லியம்சன் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதை ஐசிசி அறிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை குவித்தவர் என்ற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஏற்படுத்தியிருந்தார்.
2016 – 17 இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி 655 ரன்கள் எடுத்திருந்தார். அந்த சாதனையை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது யஷஸ்வி ஜெய்ஸ்வால் முறியடித்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…