சாதி, மதத்தை குறிப்பிட்டு அரசியல் கட்சிகள் பரப்புரை செய்யக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் வசிக்கும் வாக்காளர்கள் காடு, மலை என எங்கிருந்தாலும் வாக்களிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். தேர்தல் அறிவிப்பு தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ஆள் பலம், பண பலம், வதந்தி, தேர்தல் நடத்தை விதி மீறல் ஆகியவை தேர்தல் ஆணையத்தின் முன் 4 சவால்கள் உள்ளதாக கூறினார்.
தேர்தல் முறைகேடு தொடர்பாக சி-விஜில் செயலியில் புகாரளிக்கலாம் என்றும், வேட்பாளர் விவரங்களை ஆன்லைனிலேயே வாக்காளர்கள் தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். வேட்பாளரின் கிரிமினல் விவரங்களை பத்திரிகை, தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ள தேர்தல் ஆணையர், மாநிலங்களுக்கு இடையேயான எல்லையை கண்காணிக்க பெரிய நெட்வொர்க் ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
வன்முறையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள ராஜீவ் குமார், வங்கிகள் மாலை 6 மணிக்கு மேல் ஏடிஎம் மையங்களில் பணம் நிறப்பக் கூடாது. அதற்கு மேல் பணத்தை எடுத்துச் செல்லக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார். அனைத்து விமான நிலையங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் கண்காணிப்பர் எனக் கூறிய தலைமை தேர்தல் ஆணையர், ரயில் நிலையங்கள், சாலைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
Read Also; மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் உத்தேச பட்டியல் இதோ
தேர்தல் பரப்புரையில் நாகரிகமாக பேசுங்கள் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவோர் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்க கூடாது என்றும் சாதி, மதத்தை குறிப்பிட்டு பரப்புரை செய்ய கூடாது எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் சமயங்களில் வதந்தி பரப்புவது தேர்தல் ஆணையத்துக்கு பெரும் சவாலான காரியமாக உள்ளதாக கூறிய அவர், தேர்தல் பிரசாரத்தில் வெறுப்பு பேச்சு கூடாது என்றார்.
தவறான செய்திகளை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு என்றும் பொய் எது, உண்மை எது என்ற விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்படும் எனவும் கூறினார். சமூக வலைதளங்களில் கருத்து கூற உரிமை உள்ளது என்றாலும் பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். நட்சத்திர பேச்சாளர்கள் பேசும்போது ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும் என்றும் ராஜீவ் குமார் அறிவுறுத்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…