யாழ் – மன்னார் பிரதான வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீபற்றி எறிந்த நிலையில் அதில் பயணித்த இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
குறித்த நபர்கள் மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரியை அனுஷ்டிப்பதற்கு இன்று(08) மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து பாய்ந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
தீ அணைப்பு
இந்நிலையில், தீயை அணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் மோட்டார் சைக்கிள் தீக்கிரையாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |