அதிகரித்து வரும் கடல் மட்டங்கள் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை அச்சுறுத்துவது மட்டுமல்லாமல், நியூயார்க் மற்றும் பால்டிமோர் போன்ற நாட்டின் சில முக்கிய நகரங்களையும் மூழ்கடித்துள்ளதாக நாசா சில அதிர்ச்சியூட்டும் படங்களை வெளியிட்டுள்ளது.
வர்ஜீனியா டெக்கின் புவி கண்காணிப்பு மற்றும் கண்டுபிடிப்பு ஆய்வகத்தில் பணிபுரியும் நாசாவின் நிதியுதவி கொண்ட விஞ்ஞானிகள் குழு, புவியியல் பிரச்னை கடற்கரையில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் நம்பியுள்ள உள்கட்டமைப்பு, விளைநிலங்கள் மற்றும் ஈரநிலங்களை அச்சுறுத்தும் அளவுக்கு வேகமாக நடக்கிறது என்று கண்டறிந்துள்ளனர்.
விஞ்ஞானிகள் கடற்கரையின் இயக்கத்தைப் புரிந்துகொள்ள செயற்கைக்கோள் தரவு மற்றும் ஜிபிஎஸ் சென்சார்களை ஆய்வு செய்தனர். நோர்போக், பால்டிமோர், நியூயார்க் மற்றும் வர்ஜீனியா போன்ற முக்கிய நகரங்களில் உள்கட்டமைப்பு 2007 மற்றும் 2020-க்கு இடையில் கணிசமாக மூழ்கிய நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1 முதல் 2 மில்லிமீட்டர் வரை நிலம் மூழ்கியுள்ளது. டெலாவேர், மேரிலாந்து, தென் கரோலினா மற்றும் ஜார்ஜியாவில் உள்ள சில மாவட்டங்களும் இரண்டு அல்லது மூன்று மடங்கு வேகத்தில் நிலம் மூழ்குவதைக் கண்டுபிடித்துள்ளனர். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, சதுப்பு நிலங்களில் உள்ள நிலம் ஒவ்வொரு ஆண்டும் 3 மில்லிமீட்டருக்கும் அதிகமாக மூழ்குகிறது. காடுகளும் உப்பு நீர் ஊடுருவல் மற்றும் வடிகால் நிலம் ஆகியவற்றால் இடம்பெயர்ந்துள்ளன.
இருப்பினும், வனவிலங்குகள் மட்டும் பாதிக்கப்படவில்லை என்ற தகவலை விஞ்ஞானிகள் உறுதிபடுத்தினர். நெடுஞ்சாலைகள் மற்றும் விமான நிலையங்களை உள்ளடக்கிய ஏறக்குறைய 8,97,000 கட்டமைப்புகள் குறைந்து வரும் நிலத்தில் உள்ளன. வர்ஜீனியா டெக் ஆய்வகத்தால் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வைத் தொடர்ந்து இந்த கண்டுபிடிப்புகள் PNAS Nexus-ல் வெளியிடப்பட்டன.
மத்திய அட்லாண்டிக் பகுதி மேலும் மூழ்கும்: நாசா படங்கள் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவிலிருந்து செயற்கைக்கோள்கள் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி நாசாவால் வரைபடங்கள் உருவாக்கப்பட்டன. படங்களில், 12,000 ஆண்டுகளுக்கு முன்பு பின்வாங்கத் தொடங்கிய லாரன்டைட் பனிக்கட்டியால் ஏற்பட்ட பாதிப்பால் மத்திய-அட்லாண்டிக் பகுதி மேலும் மூழ்கி அப்பகுதியை கீழே மூழ்கடித்தது என கண்டறிந்துள்ளனர்.
Also Read |
கோல்டன் விசா vs கோல்டன் பாஸ்போர்ட்… என்ன வித்தியாசம் தெரியுமா?
Virginia Tech Leonard Ohenhen, என்ற விஞ்ஞானி நியூஸ்வீக்-யிடம் பேசுகையில், ‘இந்த ஆராய்ச்சியில், நிலம் சரிவு எவ்வாறு சமூகங்கள், சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் பாதிப்பை கடலோர அபாயங்களுக்கு அதிகரிக்கிறது என்பதை மதிப்பிடுவதற்காக செயற்கைக்கோள் ரேடார் தரவை நாங்கள் பகுப்பாய்வு செய்தோம். எங்கள் முக்கிய கண்டுபிடிப்புகள், 1.2 முதல் 14 மில்லியன் மக்களின் 2,000 முதல் 74,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு வரை ஆண்டுக்கு 1 முதல் 2 மில்லிமீட்டர்கள் என்ற விகிதத்தில் மூழ்கி வருவதை நாங்கள் கண்டுபிடித்தோம்’ என்று கூறினார்.
‘இந்த மூழ்கும் நிலம் பல முக்கிய நகரங்களில் பாதிக்கும் மேற்பட்ட உள்கட்டமைப்பை பாதிக்கிறது, இதனால் வெள்ளம் மற்றும் பிற கடலோர ஆபத்துகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது’ என்று விஞ்ஞானி ஒஹென்ஹென் மேலும் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…