ராஞ்சியில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 4 ஆவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு இன்னும் 152 ரன்கள் தேவைப்படுகிறது.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 353 ரன்களும், இந்தியா 307 ரன்களும் எடுத்திருந்தது. இதையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் 2 ஆவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணி 145 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 2 ஆவது இன்னிங்ஸில் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.
இன்றைய 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 8 ஓவர்களில் 40 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதமுள்ள நிலையில், இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…