இந்திய பங்கு சந்தைகளில் முதலீடு செய்வதற்கு இதுவே சிறந்த தருணம் என்று பங்கு சந்தை வர்த்தக நிபுணர் ரமேஷ் தமானி கூறியுள்ளார். நியூஸ் 18 நடத்தி வரும் ரைசிங் பாரத் 2 நாள் மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ரைசிங் பாரத் என்ற 2 நாட்கள் மாநாட்டை டெல்லியில் நியூஸ் 18 குழுமம் நடத்தி வருகிறது. இன்று காலை 10.30 மணிக்கு மாநாடு தொடங்கிய நிலையில் சிறப்பு விருந்தினர்கள் தற்போது உரையாற்றி வருகின்றனர். இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உரையுடன் முதல் நாள் அமர்வு நிறைவு பெறும்.
நாளை பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்று பேசவுள்ளார்.ஏற்கனவே 3 முறை ரைசிங் பாரத் மாநாட்டி நியூஸ் 18 குழுமம் நடத்தியுள்ளது. இன்றும் நாளையும் இந்த மாநாடு நடைபெறுகிறது. முதல் நாள் மாநாட்டில் மத்திய அமைச்சர்கள், பல்துறை வல்லுனர்கள் பேசியுள்ளனர்.
காலையில் பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் புல்லட் ரயில்கள் இயக்கம் குறித்து எடுத்துரைத்தார். இந்தியாவின் முதல் புல்லட் ரயில் 2026 ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டிற்கு வரும் என்றும் அவர் கூறினார்.
மாநாட்டில் பங்கேற்று பிரபல பங்குசந்தை வர்த்தக நிபுணர் ரமேஷ் தமானி கூறியதாவது- இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு இது சிறந்த தருணம். ஊழல் குறைப்பு மற்றும் நிர்வாகத்தில் முன்னேற்றத்திற்குப் பிறகு பங்கு சந்தை தொடர்ந்து ஏற்றம் அடைந்து வருகிறது. எதிர்காலத்திலும் இந்த வேகத்தை சந்தை தொடரும் என்று எதிர்பார்க்கலாம். இப்போது உலகம் முழுவதும் பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.
இந்தியா உலகிலேயே அதிக எண்ணிக்கையில் உழைக்கும் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் நுகர்வு தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பொருளாதாரத்தின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும். என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…