அமெரிக்காவில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராடிய கோவையை சேர்ந்த மாணவி கைது செய்யப்பட்டார். பல்கலைகழகத்துக்குள் நுழையவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலை கழகத்தில் பயிலும் பாலஸ்தீனிய ஆதரவு மாணவர்கள், காசா போரில் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் நிகழ்விடத்துக்கு சென்று போராட்டத்தை கைவிடும்படி மாணவர்களிடம் வலியுறுத்தினர். எனினும் அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால், இந்திய மாணவி அச்சிந்தியா சிவலிங்கம் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த மாணவர்கள் பல்கலை கழகத்துக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அச்சிந்தியா, கோவையில் பிறந்தவர் என்றாலும், அவர் அமெரிக்காவின் ஓகியோவின் கொலம்பஸ் பகுதியில் வளர்ந்தார். ஓகியோ மாகாண பல்கலை கழகத்தில் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுள்ளார். தற்போது பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தில் முதுமலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…