கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விலகிய பிறகு அரசியல் பக்கம் சென்ற கம்பீர், 2022 ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வழிகாட்டியாக கம்பேக் கொடுத்தார். 2022, 2023 சீசன்களில் லக்னோ அணியுடன் பயணித்த அவரை, கொல்கத்தா அணியின் வழிகாட்டியாக, அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கான் அழைத்து வந்தார்.