சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சிறுவனை கடத்திய பெண் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் கத்வால் நகரை சேர்ந்த 3 வயது சிறுவன் அபினய், தனது பெற்றோருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்தார். சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதி மலையில் உள்ள இரண்டாவது பல் வசதி மண்டபத்தில் தங்கியிருந்தனர். அப்போது, சிறுவன் அபினய் திடீரென காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அப்பகுதியில் வலைவீசி தேடினர். ஆனால், சிறுவன் தொலைந்து போனதை அறிந்த பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அடையாளம் தெரியாத பெண், அந்த சிறுவனை தோளில் சுமந்து கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படைகளை அமைத்து போலீசார் சிறுவனை தீவிரமாக தேடி வருகின்றனர். குழந்தை கடத்தல் தொடர்பாக திருப்பதி ரயில் நிலையம், திருப்பதியில் உள்ள பேருந்து நிலையத்திலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
மேலும், ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இது தவிர தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் குழந்தை கடத்தல் தொடர்பாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பு உள்ள திருப்பதி கோயிலில் 3 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…