Last Updated:
மத்திய பிரதேசத்தில் மாடல் அழகி மர்ம மரணத்தில் அவரது காதலனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மத்தியபிரதேசத்தின் போபாலில் வசித்து வந்தவர் குஷ்பு வர்மா. மாடலிங் துறை சாதிக்க ஆசை கொண்டவர் கல்லூரி படித்து பாதியில் நிறுத்தி விட்டு போட்டோஷூட்கள் நடத்தி வந்ததுடன், பல பிராண்ட் விளம்பரங்களுடம் நடித்துள்ளார். கூடவே இன்ஸ்டாவில் “டைமண்ட் கேர்ள்” எனும் பெயரில் கணக்கு தொடங்கி 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலோவர்களை வைத்திருக்கிறார்.
இப்படி சோசியல் மீடியாவில் முழு நேரம் பிசியாக இருந்த குஷ்பு, காசிம் என்பவரை காதலித்து அவருடன் லிவிங் டூ கெதரிலும் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று காதலன் காசிமுடன் உஜ்ஜைனியிலிருந்து போபாலுக்கு பேருந்தில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்தூர் சாலையில் உள்ள பைன்சேகேடி அருகே சென்று கொண்டிருந்த போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும், மயக்க நிலையில் சுயநினைவை இழந்தாகவும் கூறப்படுகிறது.
அதனால் குஷ்புவை அவரது காதலன் காசிம், அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், அனுமதித்து விட்டு அங்கிருந்து தலைமறைவானதாக கூறப்படுகிறது அவசர சிகிச்சை பிரிவில் பேச்சு மூச்சில்லாமல் கிடந்த குஷ்புவின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்திருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க குஷ்புவின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர்.
“குஷ்பு உயிரிழந்தது எப்படி? திட்டமிட்ட கொலையா? ” என பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. அது தொடர்பாக விசாரணையை தொடங்கிய போலீசார் தப்பியோடிய அவரது காதலன் காசிமை கைது செய்து விசாரித்தனர். “குஷ்புவின் குடும்பத்தினருக்கு பயந்தே ஓடியதாகவும் ; தனக்கும் குஷ்புவின் மரணத்திற்கும் தொடர்பில்லை ” என அவர் கூறியுள்ளார்.
மேலும் “குஷ்புவை உண்மையாக காதலிக்கிறேன் ; அவர் என் குழந்தையை வயிற்றில் சுமக்கிறார் ; விரைவில் நாங்கள் திருமணம் செய்து கொள்ளவும் இருந்தோம் ” என கண்ணீர் விட்டுள்ளார். தப்பியோடிய காதலனின் வாக்குமூலம் போலீசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்த, அந்நேரம் குஷ்புவின் பிரேத பரிசோதனை அறிக்கையும் வந்தது. அதில் கர்ப்பமாக இருந்த குஷ்புவின் வயிற்றில் ஃபலோபியன் குழாய் உடைந்து உட்புற இரத்தப்போக்கு ஏற்பட்டதாக உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனால் வழக்கின் விசாரணை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கிடையே காதலன் காசிம் மீது குஷ்புவின் தயார் பல பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். காசிம், தனது மகளை அடித்து சித்ரவதை செய்து வந்ததாகவும், மகளின் இறப்பிற்கு காசிம் தான் காரணம் என்றும் புகார் அளித்துள்ளார். கடந்த இரு மாதங்களுக்கு முன் நடந்த தகராறில் காசிம் குஷ்புவை கண்டுமூடித்தனமாக தாக்கியதாக அவரது சகோதரி அஹிர்வார் கூறியுள்ளார்.
ஆனால் போலீசில் கைதான காசிம் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். மேலும் பிரேத பரிசோதனையில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லையென்றும் தடயவியல் சோதனைக்காக உள்ளுறுப்புகள் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பபட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விசாரணையின் முடிவிலேயே குஷ்புவின் உயிரிழப்புக்கான உண்மை பின்னணி என்ன என்பது குறித்து தெரியவரும்..
November 12, 2025 9:06 PM IST


