• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டெல்லி குண்டுவெடிப்புக்கு தார்மீக பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும்: காங்கிரஸ் | Amit Shah must take moral responsibility and resign, this is a security failure: Congress

GenevaTimes by GenevaTimes
November 12, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
டெல்லி குண்டுவெடிப்புக்கு தார்மீக பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும்: காங்கிரஸ் | Amit Shah must take moral responsibility and resign, this is a security failure: Congress
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருவனந்தபுரம்: டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், “காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது மும்பை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அதற்கு தார்மீக பொறுப்பேற்று அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்தார்.

ஆனால், இந்த சம்பவம் நாட்டின் தலைநகரில் நடந்துள்ளது, மும்பையில் அல்ல. இது மிக மோசமான பாதுகாப்பு குறைபாடு. நாடாளுமன்றத்தில் பேசும்போதெல்லாம், எங்கள் ஆட்சியில் கலவரங்கள் இல்லை, குண்டு வெடிப்புகள் இல்லை, அனைத்தில் இருந்தும் நாட்டை விடுவித்துள்ளோம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுவார்.

தற்போது அவரது கண்களுக்கு முன்னால், அவரது அலுவலகத்துக்கு மிக அருகில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனவே, இதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும். குண்டுவெடிப்பு தொடர்பாக தெளிவான, முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். விசாரணையின் மூலம் தெரிய வரும் குண்டுவெடிப்புக்கான உண்மையான காரணங்கள் நாட்டு மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.” என தெரிவித்தார்.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த கே.சி. வேணுகோபால், “ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்ததும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்ன தெரிவித்தன. காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, பாஜக ஆட்சிக்கு வந்தது. அதை எதிர்த்து நாங்கள் தற்போது போராடுகிறோம். அது வேறு விஷயம். எனவே, தேர்தல் முடிவுகள் வரும் வரை பொருத்திருப்போம்.” எனத் தெரிவித்தார்.



Read More

Previous Post

2026 வரியை விழுகும் அரச செலவுகள்

Next Post

பாதுகாப்பான வருமானத்தை தேடுறீங்களா..? சிறந்த வட்டி வழங்கும் திட்டங்கள்

Next Post
பாதுகாப்பான வருமானத்தை தேடுறீங்களா..? சிறந்த வட்டி வழங்கும் திட்டங்கள்

பாதுகாப்பான வருமானத்தை தேடுறீங்களா..? சிறந்த வட்டி வழங்கும் திட்டங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin