லிட்டில் இந்தியாவில் உள்ள தேக்கா நிலையத்துக்கு வெளியே உள்ள நெரிசலான பாதசாரிகள் நடைபாதையில் நான்கு பெண்கள் சண்டையில் ஈடுபட்டனர்.
கடந்த நவ.2 ஆம் தேதி மதியம் நடந்த இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த காணொளி நவம்பர் 4 ஆம் தேதி சமூக ஊடகங்களில் வழியே பகிரப்பட்டது. ஏன் இந்த சண்டை ஏற்பட்டது என்பதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.
குறிப்பாக வார இறுதியில் அடிக்கடி இதுபோன்ற சச்சரவுகள் மற்றும் சண்டைகள் ஏற்படுவதை முன்பு பார்த்துள்ளதாக சில வர்த்தகர்கள் ஷின் மின் செய்தியிடம் கூறினர்.
இந்த சண்டை ஏன் ஏற்பட்டது என்று தெரியவில்லை என குறிப்பிட்ட வர்த்தகர்கள், காவல்துறை வந்ததை அறிந்ததாகவும் குறிப்பிட்டனர்.
NETS, PayNow பயன்படுத்தினால் கூடுதல் கட்டணம் தேவையில்லை – Singapore Pools அதிரடி அறிவிப்பு
இவ்வாறான சண்டை சச்சரவுகள் நடந்தால் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறியதாக அது சொன்னது.
இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
லிட்டில் இந்தியாவில் சந்துக்குள் இழுத்துச் சென்று தாக்கி கொள்ளை – இளைஞர் கைது

