ஈப்போ: புதன்கிழமை (நவம்பர் 12) அதிகாலை வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (பிளஸ்) வடக்கு நோக்கிச் செல்லும் KM254 இல், கட்டுப்பாட்டை இழந்து லோரி தீப்பிடித்ததில், லோரி ஓட்டுநர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார்.
அதிகாலை 3.19 மணிக்கு அவசர அழைப்பைத் தொடர்ந்து, கோல கங்சார், மேரு ராயா தீயணைப்பு நிலையங்களில் இருந்து குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டதாக பேராக் தீயணைப்பு, மீட்புத் துறையின் செயல் துணை இயக்குநர் ஷாஸ்லீன் முகமட் ஹனாஃபியா தெரிவித்தார்.
காய்கறிகளை ஏற்றிச் சென்ற குளிர்சாதன பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் அது சாலையில் இருந்து விலகி தீப்பிடித்ததாக நம்பப்படுகிறது. 64 வயதான பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது என்று அவர் புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் உடல் மேலதிக விசாரணைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், காலை 5.07 மணிக்கு நடவடிக்கை முடிவடைந்ததாகவும் ஷாஸ்லீன் கூறினார்.



