Last Updated:
டெல்லி செங்கோட்டை கார் வெடிகுண்டு தாக்குதல் தற்கொலைப்படை அல்ல, பயத்தில் நடந்தது என ஏ.என்.ஐ. தகவல்.
டெல்லி, செங்கோட்டை அருகே மெட்ரோ ரயில் கேட் 1 பகுதியில் நேற்று மாலை நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர்.
இந்த வழக்கு தற்போது என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. டெல்லி வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் மருத்துவர்கள் முஷாமில் கானேய், ஷாஹீன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, அவர்களிடத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லி செங்கோட்டை கார் வெடிகுண்டு தாக்குதல் குறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் சில தகவல்கள் கிடைத்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த கார் வெடிகுண்டு தாக்குதல் தற்கொலைப்படை தாக்குதல் அல்ல, சந்தேகப்படும் நபர் பயத்தில் இதனை செய்துள்ளார் எனச் சொல்லப்பட்டுள்ளது.
குறிப்பாக டெல்லி-NCR மற்றும் புல்வாமா என பல இடங்களிலும், பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனையில், கணிசமான அளவு வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதன் காரணமாக சந்தேக நபர் அவசரமாக இந்தக் காரியத்தை செய்திருப்பார் என சொல்லப்பட்டுள்ளது.
குண்டு முழுமையாக தயாரிக்கப்படுவதற்கு முன்னதாகவே வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பெரிய அளவில் தாக்கம் இல்லை என்றும், குண்டு வெடித்த இடத்தில் அதன் காரணமாகவே பெரும் பள்ளம் எதுவும் உருவாகவில்லை. மேலும், அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வகையில் IED பொருத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சந்தேக நபர் தற்கொலை கார் குண்டுவெடிப்பின் வழக்கமான முறையைப் பின்பற்றவில்லை. அவர் காரை ஒரு இலக்கில் மோதவோ அல்லது வேண்டுமென்றே மோதவோ இல்லை. ஒரு பெரிய தாக்குதல் தவிர்க்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
November 11, 2025 9:55 PM IST
Red Fort | டெல்லி செங்கோட்டை கார் வெடிகுண்டு தாக்குதல்… திட்டமிட்டது அல்ல பயத்தால் நடந்தது – ஏ.என்.ஐ. தகவல்


