Last Updated:
நடப்பு ஆண்டில் 49.60 சராசரியில் 496 ரன்கள் குவித்து, இந்திய மிடில்-ஆர்டரின் முக்கிய வீரர்களில் ஒருவராக ஷ்ரேயாஸ் ஐயர் விளங்குகிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் காயம் அடைந்த ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஆக்ஸின் அளவு 50 சதவீதம் வரை குறைந்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. தற்போது அவரது உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்திய பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர், கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அலெக்ஸ் கேரியை அவுட் செய்வதற்காக டைவ் அடித்து கேட்ச் பிடித்தபோது பலத்த காயமடைந்தார்.
இந்தச் சம்பவம் கிட்டத்தட்ட உயிருக்கே ஆபத்தானது என்று கூறப்படுகிறது. காயமடைந்த தருணத்தில், அவரது ஆக்ஸிஜன் அளவு 50 ஆகக் குறைந்து என்றும் அவருக்குப் 10 நிமிடங்கள் வரை முழுமையான மயக்கம் ஏற்பட்டதாகவும், அவரால் சரியாக நிற்க முடியவில்லை என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த காயம் காரணமாக, அவருக்கு உள் இரத்தப்போக்கு ஏற்பட்டு, சிட்னி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வாரம் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், அவர் சர்வதேச கிரிக்கெட் விளையாட முழுமையாகத் தயாராக இன்னும் அதிக காலம் தேவைப்படும் என்று கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியமும் தேர்வுக் குழுவும் அவரது காயத்திற்குப் பிறகு அவரை அவசரமாகக் களமிறக்க விரும்பவில்லை.
அதன் காரணமாக நவம்பர் 30 முதல் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ராஞ்சி, ராய்ப்பூர் மற்றும் விசாகப்பட்டினத்தில் விளையாடவிருக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
November 11, 2025 3:07 PM IST


