Last Updated:
விடுவிக்கப்படும் வீரர்களின் ஒப்பந்தத் தொகை, அந்தந்த அணியின் ஏலத்திற்கான மொத்த நிதித் தொகையுடன் சேர்க்கப்படும்.
முன்னாள் சிஎஸ்கே நட்சத்திர ஆல்-ரவுண்டரான சுரேஷ் ரெய்னா, மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திற்கு ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளார். வீரர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கான அறிவிப்புகளுக்கு முன்னதாக, சில வீரர்களை அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ஐபிஎல் 2026 மினி ஏலம், டிசம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மினி ஏலத்தில், அணிகள் மெகா ஏலத்தில் இருப்பது போல் தங்கள் அணியின் முழு அமைப்பையும் கலைக்காது. அதற்குப் பதிலாக ஏலத்திற்கு முன்னதாக, ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைத்துக்கொள்ள விரும்பும் வீரர்களின் இறுதிப் பட்டியலை அறிவிக்க வேண்டும். தக்கவைப்புக்கான காலக்கெடு நவம்பர் 15 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தக்கவைக்கப்பட்ட வீரர்களைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் அணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். மினி ஏலத்தில், அணிகள் விடுவிக்கப்பட்ட வீரர்கள் மற்றும் ஏலத்திற்குப் பதிவு செய்துள்ள புதிய வீரர்களை வாங்க முயற்சிக்கும்.
விடுவிக்கப்படும் வீரர்களின் ஒப்பந்தத் தொகை, அந்தந்த அணியின் ஏலத்திற்கான மொத்த நிதித் தொகையுடன் சேர்க்கப்படும். இந்த நிதியை வைத்தே அணிகள் புதிய வீரர்களை ஏலம் எடுக்க முடியும்.
இந்நிலையில் மினி ஏலம் தொடங்குவதற்கு முன்பாக மும்பை அணி வில் ஜாக்ஸ் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரை விடுவிக்கலாம் என சுரேஷ் ரெய்னா ஆலோசனை கூறியுள்ளார்.
November 10, 2025 9:58 PM IST


