• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தூத்துக்குடியில் நடப்பாண்டில் 19 லட்சம் டன் உப்பு உற்பத்தி: விலை குறைவால் உப்பளங்களில் தேக்கம் | Thoothukudi to produce 1.9 million tonnes of salt this year

GenevaTimes by GenevaTimes
November 10, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தூத்துக்குடியில் நடப்பாண்டில் 19 லட்சம் டன் உப்பு உற்பத்தி: விலை குறைவால் உப்பளங்களில் தேக்கம் | Thoothukudi to produce 1.9 million tonnes of salt this year
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தூத்துக்குடி: நடப்​பாண்​டில் தூத்​துக்​குடி மாவட்​டத்​தில் 19 லட்​சம் டன் அளவுக்கு உப்பு உற்​பத்தி நடந்​துள்​ள​தாக உற்​பத்​தி​யாளர்​கள் தெரி​வித்​துள்​ளனர். தூத்​துக்​குடி மாவட்​டத்​தில் வேம்​பார், தூத்​துக்​குடி, முத்​தை​யாபுரம், முள்​ளக்​காடு, ஆறு​முகநேரி பகு​தி​களில் 20 ஆயிரம் ஏக்​கரில் உப்​பளங்​கள் அமைந்​துள்​ளன.

இவற்​றில் சுமார் 30 ஆயிரம் தொழிலா​ளர்​கள் பணி​யாற்​றுகின்​றனர். ஆண்​டுக்கு சராசரி​யாக 25 லட்​சம் டன் உப்பு உற்​பத்தி செய்யப்​படு​கிறது. நாட்​டின் உப்பு உற்​பத்​தி​யில் குஜ​ராத் மாநிலத்​துக்கு அடுத்​த​படி​யாக தூத்​துக்​குடி மாவட்​டம் உள்​ளது.

இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்​பத்​திக்​கான பணி​கள் தொடங்​கும். ஏப்​ரல் முதல் செப்​டம்​பர் வரை 6 மாதங்​கள் தான் உப்பு உற்​பத்​திக்​கான உச்​சகட்ட காலங்​கள். அக்​டோபர் மாதம் வடகிழக்கு பரு​வ​மழை தொடங்​கியதும் உப்பு சீசன் முடியும். கடந்த ஆண்டு வடகிழக்கு பரு​வ​மழை ஜனவரி மாதம் கடைசி வாரம் வரை நீடித்​துள்​ளது. இதன் காரண​மாக உப்பு உற்​பத்​திக்​கான பணி​கள் தாமத​மாகவே தொடங்​கின.

இந்த ஆண்டு மே 15-ம் தேதி வரை மழை குறுகிட்​டதால் உப்பு உற்​பத்தி சரி​யாக நடை​பெற​வில்​லை. ஆனால், மே 15-ம் தேதிக்கு பிறகு உப்பு உற்பத்​திக்கு சாதக​மான சூழ்​நிலை ஏற்​பட்​டது. அதன் பிறகு அக்​டோபர் 15 வரை உப்பு உற்​பத்தி அமோக​மாக நடை​பெற்​றது. கடந்த ஆண்டு 50 சதவீதம் மட்​டுமே உப்பு உற்​பத்​தி​யாகி இருந்த நிலை​யில், இந்த ஆண்டு உப்பு உற்​பத்தி 75 சதவீதத்தை கடந்​துள்​ளது. வடகிழக்கு பரு​வ​மழை அக்​டோபர் 16-ல் தொடங்​கியதை தொடர்ந்து நடப்பு உப்பு உற்​பத்தி சீசன் முடிவுக்கு வந்துள்ளது.

இதையடுத்து உற்​பத்தி செய்​யப்​பட்ட உப்பை மழை​யில் இருந்து பாது​காக்​கும் வகை​யில், உப்​பளங்​களில் உள்ள உப்பு குவியல்​களை பிளாஸ்​டிக் ஷீட் போட்டு மூடி வைத்​துள்​ளனர். வடகிழக்கு பரு​வ​மழை முழு​மை​யாக முடிவடைந்த பிறகே அடுத்த சீசனுக்​கான பணி​கள் தொடங்​கும். தூத்​துக்​குடி சிறிய அளவு உப்பு உற்​பத்​தி​யாளர் சங்க முன்​னாள் செய​லா​ளர் ஏ.ஆர்​.ஏ. எஸ்​.தன​பாலன் ‘இந்து தமிழ் திசை’ செய்​தி​யாளரிடம் கூறிய​தாவது: வடகிழக்​குப் பரு​வ மழைக் காலம் தொடங்​கி யதையடுத்து தூத்​துக்​குடி மாவட்​டத்​தில் உப்பு உற்​பத்தி முடிவுக்கு வந்​துள்​ளது.

மாவட்​டத்​தில் இந்த ஆண்டு உப்பு உற்​பத்தி தாமத​மாக தொடங்​கி​னாலும், கடைசி 4 மாதங்​கள் நன்​றாக இருந்​தது. இதனால் இந்த ஆண்டு 75 சதவீதத்​துக்கு மேல், அதாவது 19 லட்​சம் டன் உப்பு உற்​பத்​தி​யாகி​யுள்​ளது.

அதே​நேரத்​தில் இந்த ஆண்டு இது​வரை சுமார் 7 லட்​சம் டன் உப்பு மட்​டுமே விற்​பனை​யாகி​யுள்​ளது. 12 லட்​சம் டன் உப்​பு, உப்​பளங்​களில் இருப்​பில் உள்​ளது. குஜ​ராத் உப்பு குறைந்த விலைக்கு கிடைத்​த​தால், தூத்​துக்​குடி உப்பு அதி​கள​வில் தேங்​கி​யுள்​ளது. அடுத்த ஆண்டு சீசன் தாமத​மாக மார்ச் மாதம் தொடங்​கி​னால், கையிருப்​பில் இருக்​கும் உப்பு காலி​யாக வாய்ப்பு உள்​ளது.

விலையை பொறுத்​தவரை கடந்த ஆண்​டுடன் ஒப்​பிடு​கை​யில் மிக​வும் குறைந்​துள்​ளது. கடந்த ஆண்டு இதே கால​கட்​டத்​தில் ஒரு டன் உப்பு ரூ.3,000 முதல் ரூ.3,500 வரை விற்​பனை​யான நிலை​யில், தற்​போது தரத்தை பொறுத்து ரூ.2,000 முதல் ரூ.2,500 வரையே விலை போகிறது. இந்த விலை அடுத்த மாதம் சற்று உயரு​வதற்கு வாய்ப்பு உள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.



Read More

Previous Post

பிஹார் மக்கள் 2-ம் கட்ட தேர்தலிலும் மாற்றத்திற்காகவே வாக்களிப்பார்கள்: தேஜஸ்வி யாதவ் | People will vote for change in Bihar second phase too Tejashwi Yadav confident

Next Post

நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட ‘Ops Noda’ சோதனை: 398 பேர் கைது

Next Post
நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட ‘Ops Noda’ சோதனை:  398 பேர் கைது

நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட ‘Ops Noda’ சோதனை: 398 பேர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin