Last Updated:
உத்தராகண்ட் மாநில வெள்ளிவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி ரூ. 8000 கோடி திட்டங்கள் தொடங்கி, ஆன்மீகத் தலைநகராக வளர்ச்சி, கல்வி மற்றும் சுற்றுலா வளர்ச்சி குறித்து பேசினார்.
உத்தராகண்டில் செயல்படும் இரட்டை எஞ்சின் அரசு மாநிலத்தை புதிய உயரங்களுக்கு அழைத்துச் செல்லும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்திலிருந்து உத்தராகண்ட் மாநிலம் பிரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதையொட்டி அந்த மாநிலம் உருவான வெள்ளிவிழாவைக் கொண்டாடும் வகையில் சுமார் 8000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்.
டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உத்தராகண்டின் ஆன்மீக பலமே அதன் உண்மையான அடையாளம் என பேசினார். மேலும், விரைவில் உலகின் ஆன்மீகத் தலைநகரமாக உத்தராகண்ட் திகழும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத், ஜகேஸ்வர் மற்றும் ஆதி கைலாஷ் ஆகிய ஆன்மீகத் தலங்களை சுட்டிக்காட்டிய மோடி, அவை நம்பிக்கையின் அடையாளமாக இருந்து லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்த்துள்ளதாக கூறினார்.
தொடர்ந்து, 25 ஆண்டுகளுக்கு முன்பு, 6 மாத காலத்திற்குள் 4,000 சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலம் உத்தரகண்டிற்கு வருகை தந்தனர். இன்று, தினமும் 4,000 சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலம் உத்தரகண்டிற்கு வருகிறார்கள். கடந்த 25 ஆண்டுகளில், பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளது. முன்பு, ஒரு மருத்துவக் கல்லூரி மட்டுமே இருந்தது; இன்று, 10 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
Uttarkashi,Uttarakhand (Uttaranchal)
November 09, 2025 7:44 PM IST
“25 ஆண்டுக்கு முன்பும்.. இன்றும்.. உத்தராகண்ட் கண்ட மாற்றங்கள்” – பட்டியலிட்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி


