Last Updated:
ஜப்பானின் இவாட் பகுதியில் 6.9 ரிக்டர் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை; அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 5.4 ரிக்டர் நிலநடுக்கம்.
வடக்கு ஜப்பானில், 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் வடக்குப் பகுதியான இவாட் பகுதியில் 16 கி.மீ. ஆழத்தில் இன்று (9ஆம் தேதி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜப்பானின் வடக்கு பகுதியான இவாட்டில் இன்று மாலை 5.03 மணிக்கு 16 கி.மீ ஆழத்தில், 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் இரண்டு அணுமின் நிலையங்கள் உள்ளன. ஆனால், அதில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், இதுவரை காயம், பாதிப்பு உள்ளிட்ட எந்த தகவலும் வெளியாகவில்லை. அதேசமயம், ஒஃபுனாடோ, ஒமினாடோ, மியாகோ மற்றும் கமைஷி ஆகிய இடங்களில் சுமார் 10 சென்டிமீட்டர் அளவுள்ள சிறிய சுனாமி அலைகள் பதிவாகியுள்ளன. அதேபோல், குஜி மற்றும் ஒஃபுனாடோவில் 20 சென்டிமீட்டர் வரை அலைகள் காணப்பட்டன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், இன்று அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் 90 கி.மீ. ஆழத்தில், 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. மேலும், அந்தமான் நிக்கோபார் தீவிலும் நிலநடுக்கத்தால் ஏதும் பாதிப்பு அல்லது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா எனும் தகவல் தற்போதுவரை வெளியாகவில்லை.
November 09, 2025 7:02 PM IST
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை! அந்தமானிலும் ஏற்பட்ட நிலநடுக்கம்!


