சிங்கப்பூரில் மது போதையில் இருக்கும் ஆடவர் ஒருவர் தொடர்ந்து பலமுறை பிளாட்டின் கீழ் தளத்தில் தூங்குவதாக பிரென்ச் சாலை குடியிருப்பாளர் ஒருவர் புகார் கூறியுள்ளார்.
அவர் அங்கு படுத்து உறங்குவதை காவல்துறை தடுக்க வேண்டும் என்றும் வாசகர் புகார் கூறுவதாக Stomp தளம் குறிப்பிட்டுள்ளது.
பிரெஞ்சு சாலையின் 8வது பிளாக்கில் கீழ் தளத்தில், இரண்டு முறை போதையில் அவர் படுத்திருக்கும் புகைப்படங்களை வாசகர் பகிர்ந்துள்ளார்.
“இந்த நபர் எப்பவும் குடிச்சுட்டுத்தான் இருப்பார். அவர் சில நண்பர்களோட சேர்ந்து குடிச்சிட்டு, ரொம்ப சத்தம் போட்டு, அந்த இடத்தையே அசுத்தமாக்குறாரு” என்று வாசகர் கூறியுள்ளார்.
“ஏன் எப்போதும் இந்த நேரத்துல? அதுவும் இரவு 10.30 மணிக்கு மேல தான் பீர் வாங்கி குடிக்கணுமா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
கடந்த நவம்பர் 3 ஆம் தேதி அங்கு கிடந்த குப்பைகளின் புகைப்படங்களையும் வாசகர் பகிர்ந்து அந்த தளத்துடன் பகிர்ந்து கொண்டார்.
லாரிக்குள் இறந்த நிலையில் கிடந்த ஊழியர் – வேலைக்குச் செல்ல இருந்தவர் சடலமாக கிடந்த சோகம்
மேலும், அந்த நபர் அங்குள்ள எல்லா இடங்களிலும் உறங்குவதாகவும், புளாக்கிற்கு பின்னால் சிறுநீர் கழிப்பதாகவும் அவர் புகார் கூறினார்.
மது போதையில் இருக்கும் அந்த கும்பல் ஒவ்வொரு நாளும் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக காவல்துறைக்கு செய்தியை அனுப்ப முடியுமா? என்றும் அந்த வாசகர் Stomp தளத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
சிங்கப்பூரில் இனி மோசடியில் ஈடுபட்டால் குறைந்தது 6 பிரம்படி – புதிய சட்ட திருத்தம் அமல்
Photo: Stomp

