யாழ்ப்பாணத்தில் நேற்று (07) ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று பேர் கையும் களவுமாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருளை நுகர்வதற்காக பயன்படுத்தப்பட்ட மருத்துவ ஊசி உள்ளிட்ட சில பொருள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
யாழ்ப்பாணம் பொலிஸ் போதைதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுள கருணாரத்ன தலைமையிலான குழுவினரின் ரோந்து நடவடிக்கைகளின் போது இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நல்லூர் பகுதியைச் சேர்ந்த 30 வயதான இளைஞரும் அரியாலை பகுதியைச் சேர்ந்த முறையே 30 மற்றும் 32 வயதான இரண்டு இளைஞர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். (a)


