Last Updated:
அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த ரஷ்யா விரும்பவில்லை என கூறினார்.
உக்ரைன் உடனான போரை நிறுத்த ரஷ்யா விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிர முனைப்பு காட்டி வருகிறார். இது தொடர்பாக, கடந்த ஆகஸ்ட் மாதம் அலாஸ்காவில் டிரம்ப் மற்றும் புதின் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், போரை நிறுத்த ரஷ்யா விரும்பவில்லை என்றும், அதனால் தான் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையில் ஹங்கேரி நாட்டிற்கு மட்டும் விலக்கு அளிக்க இருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். வேறு நாடுகளிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கு அந்நாட்டின் புவியியல் அமைப்பு இடம் தராததால், இம்முடிவை எடுக்க இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
November 08, 2025 5:55 PM IST


