Last Updated:
ஷியோபூர் ஹுல்பூர் அரசு பள்ளியில் பேப்பரில் மதிய உணவு வழங்கப்பட்டதால் சத்துணவு பொறுப்பாளர் நீக்கம்.
மத்திய பிரதேசத்தில் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு பேப்பரில் மதிய உணவு பரிமாறப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள ஹுல்பூர் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்களை வளாகத்தில் அமர வைத்து தட்டிற்கு பதிலாக, பேப்பர்களில் மதிய உணவு பரிமாறப்பட்டது. மதிய உணவுத் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு சுகாதாரமற்ற முறையில் உணவு வழங்கப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
श्योपुर की तस्वीर है, मिड-डे मील रद्दी अखबार में परोसा जा रहा है
मिड-डे मील अब प्रधानमंत्री पोषण शक्ति निर्माण टाइप कुछ हो गया है 2023 बीजेपी ने घोषणापत्र में इसमें पौष्टिक भोजन देने की बात कही थी, पौष्टिक तो दिख रहा है फिलहाल परोसा कैसे जाए ये तय हो जाता @GargiRawat @manishndtv pic.twitter.com/ecrHIeLgu5
— Anurag Dwary (@Anurag_Dwary) November 6, 2025
இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஷியோபூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி, சத்துணவு பொறுப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
November 08, 2025 8:06 AM IST


