• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ராஷ்டிரிய ஜனதா தளமும், காங்கிரஸும் ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவு: பிஹார் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு | pm modi slams rjd congress party in bihar campaign

GenevaTimes by GenevaTimes
November 8, 2025
in இந்தியா
Reading Time: 6 mins read
0
ராஷ்டிரிய ஜனதா தளமும், காங்கிரஸும் ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவு: பிஹார் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு | pm modi slams rjd congress party in bihar campaign
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தளமும், காங்​கிரஸும் ஊடுரு​வல்​காரர்​களுக்கு ஆதர​வாக செயல்​படு​கின்றன என்று பிரதமர் நரேந்​திர மோடி குற்​றம் சாட்டி உள்​ளார்.

பிஹாரில் இரண்​டாம் கட்​ட​மாக வரும் 11-ம் தேதி 122 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கு தேர்​தல் நடக்​கிறது. அரரியா சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் தேசிய ஜனநாயக கூட்​டணி வேட்​பாளர்​களுக்கு ஆதர​வாக பிரதமர் நரேந்​திர மோடி நேற்று வாக்கு சேகரித்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:

பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் 15 ஆண்​டு​கள் ஆட்சி நடத்​தி​யது. அன்​றைய காட்​டாட்​சி​யில் பிஹாரின் வளர்ச்சி பூஜ்ஜிய​மாக இருந்​தது. புதிய நெடுஞ்​சாலைகள், பாலங்​கள் கட்​டப்​பட​வில்​லை. புதிய கல்வி நிறு​வனங்​கள் தொடங்​கப்​பட​வில்​லை.

முதல்​வர் நிதிஷ் குமார் தலை​மை​யில் தேசிய ஜனநாயக கூட்​டணி அரசு பதவி​யேற்ற பிறகு பிஹார் மாநிலம் அபரித​மாக வளர்ச்சி அடைந்து வரு​கிறது. மாநிலம் முழு​வதும் ஏராள​மான விரைவு சாலைகள் அமைக்​கப்​பட்டு உள்​ளன. ஏராள​மான புதிய பாலங்​கள் கட்​டப்​பட்டு உள்​ளன. புதி​தாக 4 மத்​திய பல்​கலைக்​கழகங்​கள் தொடங்​கப்​பட்டு உள்​ளன.

பிஹார் மாநில வளர்ச்​சிக்கு ஊடுரு​வல்​காரர்​கள் மிகப்​பெரிய தடை​யாக உள்​ளனர். நாட்​டில் இருந்து ஊடுரு​வல்​காரர்​களை வெளி​யேற்ற மத்​திய அரசும் பிஹார் மாநில அரசும் பல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கின்​றன. ஆனால் ராஷ்டிரிய ஜனதா தளமும் காங்​கிரஸும் ஊடுரு​வல்​காரர்​களுக்கு ஆதர​வாக செயல்​படு​கின்​றன.

பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​யின்​போது ஊடுரு​வல்​காரர்​களின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டன. ஆனால் அவர்​களுக்கு ஆதர​வாக ராகுல் காந்​தி​யும், தேஜஸ்வி யாத​வும் யாத்​திரை மேற்​கொண்​டனர். ராஷ்டிரிய ஜனதா தளம், காங்​கிரஸ் கூட்​டணி ஆட்சி அமைத்​தால் ஊடுரு​வல்​காரர்​கள் பிஹாருக்​குள் பின்​வாசல் வழி​யாக நுழை​வார்​கள்.

சத்தி மையா வழி​பாடு, ஒரு நாடகம் என்று காங்​கிரஸ் தலைமை குற்​றம் சாட்​டியது. அயோத்தி ராமர் கோயிலுக்கு காங்​கிரஸ் மேலிட தலை​வர்​கள் ஒரு​முறை கூட செல்​ல​வில்​லை. உத்தர பிரதேசம், பிர​யாக்​ராஜில் மகா கும்​பமேளா நடை​பெற்​ற​போது காங்​கிரஸ் தலை​வர்​கள் விமர்​சனம் செய்​தனர்.

வாக்கு வங்கி அரசி​யல் காரண​மாக ராஷ்டிரிய ஜனதா தளமும் (ஆர்​ஜேடி), காங்​கிரஸும் பகவான் ராமரை வெறுக்​கின்​றன. நிஷாத் ராஜ், ஷப்ரி மாதா, மகரிஷி வால்​மீகி கோயில்​களுக்கு கூட ஆர்​ஜேடி, காங்​கிரஸ் தலை​வர்​கள் செல்​வது கிடை​யாது. இதன்​மூலம் பிற்​படுத்​தப்​பட்ட, பட்​டியலின மக்​களை​யும் அவர்​கள் வெறுக்​கின்​றனர் என்​பது தெளி​வாகிறது.

மெகா கூட்​ட​ணி​யின் முதல்​வர் வேட்​பாள​ராக தேஜஸ்வி யாதவை முன்​னிறுத்த காங்​கிரஸ் விரும்​ப​வில்​லை. இதன்​காரண​மாக ஆர்​ஜேடி, காங்​கிரஸுக்கு இடையே மோதல் நீடித்து வரு​கிறது. தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் பிரச்​சார கூட்​டங்​களில் மக்​கள் பெருந்​திரளாக கூடு​கின்​றனர். இதன்​மூலம் எங்​கள் கூட்​ட​ணி​யின் வெற்றி உறுதி செய்​யப்​பட்டு உள்​ளது. பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்​டணி மீண்​டும் ஆட்சி அமைக்​கும். இவ்​வாறு அவர் பேசி​னார்.



Read More

Previous Post

கொட்டாஞ்சேனையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு

Next Post

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை​யான 2 கூறல் மீன்கள் ரூ.1.65 லட்சத்துக்கு விற்பனை | Two rare species of fish caught in Pamban fisherman net

Next Post
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை​யான 2 கூறல் மீன்கள் ரூ.1.65 லட்சத்துக்கு விற்பனை | Two rare species of fish caught in Pamban fisherman net

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை​யான 2 கூறல் மீன்கள் ரூ.1.65 லட்சத்துக்கு விற்பனை | Two rare species of fish caught in Pamban fisherman net

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin