இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் வகையில் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளானது இலங்கையில் மட்டுமல்லாது உலக தமிழர்கள் மத்தியிலும் இடம்பெற்றுள்ளது.
இதனடிப்படையில், நேற்று (18) தமிழ்நாட்டின் தஞ்சாவூா் விளாா் சாலையிலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழா் பேரவை
குறித்த நினைவேந்தல் நிகழ்வானது, உலகத் தமிழா் பேரவைத் தலைவா் பழ. நெடுமாறன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பழ. நெடுமாறன் உள்ளிட்ட தமிழ் உறவுகள் ஈழப்போரின் இறுதி வடுக்களை நினைவூகூர்ந்து உணர்வூப்பூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

