Last Updated:
ஹரியானாவில் பிரேசிலைச் சேர்ந்த இளம் மாடல் ஒருவரின் புகைப்படத்துடன் 22 வாக்குகள் பதிவாகி இருப்பதாக ராகுல் காந்தி ஆதாரத்தை வெளியிட்டார்.
ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாகக் குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, பிரேசில் மாடல் அழகியின் புகைப்படத்துடன் 22 வாக்குகள் பதிவானதாக ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வாக்குத் திருட்டு குறித்து ஜென்சி இளம் தலைமுறையினர் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணையம் மற்றும் இந்தியாவில் தற்போதுள்ள ஜனநாயக முறையை 100 சதவிகிதம் ஆதாரத்துடன் தான் கேள்வி கேட்பதாகக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, ஹரியானாவில் 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததாகக் கூறினார்.
இந்நிலையில், ஹரியானாவில் பிரேசிலைச் சேர்ந்த இளம் மாடல் ஒருவரின் புகைப்படத்துடன் 22 வாக்குகள் பதிவாகி இருப்பதாக ராகுல் காந்தி ஆதாரத்தை வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அவர், இதே போன்று, 2 வாக்குச்சாவடிகளில் ஒரு பெண்ணின் விவரங்கள் மட்டும் 223 முறை பதிவு செய்யப்பட்டு இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் போலியானவை என்று ராகுல் காந்தி கூறினார். 8 வாக்காளர்களில் ஒருவர் போலி என்று கூறிய ராகுல் காந்தி, இதற்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
25 லட்சம் போலி வாக்குகளில், ஒரே முகவரிகள் மற்றும் ஒரே பெயர்களில் 19 லட்சம் வாக்காளர்களும், 5 லட்சம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள டூப்ளிகேட் வாக்காளர்கள் என்றும் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
பாஜக தலைவர்களின் மகன்கள் உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானாவில் வாக்களித்து இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், ஜனநாயகத்தை அழிப்பதற்கு, தேர்தல் ஆணையம் கையில் எடுத்துள்ள கடைசி ஆயுதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
November 05, 2025 4:26 PM IST
“ஹரியானாவில் 22 முறை வாக்குச் செலுத்திய பிரேசில் மாடல்…” – ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு


