Last Updated:
இந்த கோர விபத்தில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என கருதப்படுகிறது.
மிர்சாபூரில் ரயில் தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி 4 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர விபத்தில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்து மதத்தில் கங்கை நதியில் புனித நீராடுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதற்காக பொதுமக்கள் பல மாநிலங்களில் இருந்து பயணம் செய்து வருவார்கள். அப்படி தான் சோப்பனில் இருந்து வாரணாசி வரை சில பக்தர்கள் கங்கையில் நீராடுவதாக சென்றுள்ளனர். அப்போது சுனார் ரயில் நிலையத்தில் இறங்கிய இந்த பக்தர்கள் தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்த போதுதான் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ரயில்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, பயணிகள் ரயிலின் நடைமேடைப் பக்கத்தில் இறங்காமல் பக்தர்கள் எதிர் பக்கத்தில் இறங்கியுள்ளனர். அப்போது எதிர் திசையில் இருந்து வந்த மற்றொரு ரயில் அவர்களை மோதியது.
இதில் சில 2 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களே தவறான திசையில் இறங்கியுள்ளதால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
November 05, 2025 11:59 AM IST


