Last Updated:
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 172 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்று லீக் சுற்று முடிந்துள்ள நிலையில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில் துபாயில் நடைபெற்று வரும் சூப்பர் 4 சுற்றின் 2 ஆவது போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி எதிர்கொண்டு விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து தொடக்க வீரர்களாக களம் இறங்கிய பாகிஸ்தான் அணியின் பகர் ஜமான் 15 ரன்களும், அடுத்து வந்த சைம் அயுப் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். உசைன் தலாத் 10 ரன்கள் சேர்த்தார்.
விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் சகிப்சதா பர்கான் 45 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
கேப்டன் சல்மான் அகா 17 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவர்களில் பகீம் அஷ்ரப் 8 பந்துகளில் 2 சிக்சருடன் 20 ரன்கள் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.
September 21, 2025 10:09 PM IST


