Last Updated:
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் உச்ச சபை உறுப்பினர்கள் 2025–2028 காலகட்டத்திற்கான பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தலில் தலைவர் பொறுப்புக்கு சீனிவாச ராஜ் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (TNCA) 2025–2028-ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் இன்று வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதை TNCA அறிவித்துள்ளது. இந்தத் தேர்தல்கள், அமைப்பின் விதிமுறைகளின்படி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான டாக்டர். டி. சந்திரசேகரன் மேற்பார்வையில் நடத்தப்பட்டுள்ளன.
இந்தத் தேர்தலில் முக்கிய நிர்வாகப் பதவிகளுக்கான முடிவுகள் போட்டியின்றித் தேர்வு (Unopposed) மற்றும் வாக்கெடுப்பு (Contested) மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.
தலைவர் பொறுப்புக்கு சீனிவாச ராவ், துணை தலைவர் பொறுப்புக்கு குமாரேஷ், கவுரவ பொருளாளர் பொறுப்புக்கு ரங்கராஜன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வாக்கெடுப்பு மூலமாக கவுரவ செயலாளர் பதவிக்கு பகவான் தாஸ் ராவ், கவுரவ இணை செயலாளர் பொறுப்புக்கு ஸ்ரீராம், கவுரவ துணை செயலாளர் பொறுப்புக்கு மாரீஸ்வரன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் உச்ச சபை உறுப்பினர்கள் 2025–2028 காலகட்டத்திற்கான பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள். இவர்கள் கிரிக்கெட் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், வளர்ந்து வரும் திறமையாளர்களை வளர்த்தல் மற்றும் விளையாட்டுக் கண்காணிப்பின் மிக உயர்ந்த தரத்தை நிலைநாட்டுதல் போன் பணிகளை மேற்கொள்வார்கள்.
November 02, 2025 6:53 PM IST


