Last Updated:
Chhattisgarh | சத்தீஸ்கர் 25வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி புதிய சட்டமன்றம் திறந்து வைத்தார்.
சத்தீஸ்கர் சட்டமன்றம், ஜனநாயகத்தின் புனித ஸ்தலமாகக் காணப்படுவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, புதிதாகக் கட்டப்பட்டுள்ள சட்டமன்றத்தைத் திறந்து வைத்தார்.
தொடர்ந்து சட்டமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்டோர் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார். அதன்பின் நவ ராய்ப்பூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பழங்குடியின மக்கள் குறித்த கண்காட்சியை பிரதமர் மோடி கண்டு ரசித்தார்.
छत्तीसगढ़ की स्थापना के रजत महोत्सव में मुझे आशीर्वाद देने आए राज्य के मेरे परिवारजनों का कोटि-कोटि अभिनंदन!
जय जोहार! pic.twitter.com/iaLQqRW9YF
— Narendra Modi (@narendramodi) November 1, 2025
அதன்பின் ராய்ப்பூர் சென்ற பிரதமர் மோடி, பொதுமக்கள் மத்தியில் ரோடு ஷோ சென்றார்.
November 01, 2025 10:20 PM IST


