Last Updated:
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் ரோகன் போபண்ணா அறிவித்துள்ளார்.
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் ரோகன் போபண்ணா அறிவித்துள்ளார்.
45 வயதான ரோகன் போபண்ணா ஏறத்தாழ 22 ஆண்டுகளாக பல்வேறு டென்னிஸ் தொடர்களில் விளையாடியுள்ளார். கடைசியாக 2024ல் ஆஸ்திரேலிய வீரர் Matt Ebden உடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரை கைப்பற்றினார். இதன் மூலம் சர்வதேச அளவில் அதிக வயதில் கிராண்டஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை ரோகன் போபண்ணா படைத்தார்.
இது தவிர 2023ல் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரை சாம்பியன் பட்டம் வென்ற மூத்த வீரர் என்ற சாதனையை ரோகன் போபண்ணா படைத்திருந்தார். அதேபோல், 2017ல் பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ரோகன் போபண்ணா, இரட்டையர் தரவரிசையில் அதிக வயதில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் வீரர் என்ற மைல்கல்லையும் அடைந்தார்.
சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவை பிரபலப்படுத்தியதில் லியாண்டர் பயஸ் மற்றும் ரோகன் போபன்னாவின் பங்கு அளப்பறியது. ஏறத்தாழ 22 ஆண்டுகள் டென்னிஸ் வாழ்கையில் இருந்து விடைபெறுவதாக தெரிவித்துள்ள போபண்ணா, இத்தனை ஆண்டுகளில் தனக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்கள், சக போட்டியாளர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தான் வாழ்க்கையை இழந்து போராடும் போது கைதூக்கிவிட்டது டென்னிஸ்தான் என்றும் தன்னை சந்தேகித்தவர்களிடம் திறமையை நிரூபிக்க அது காரணமாக அமைந்ததாகவும் போபண்ணா எக்ஸ் தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
November 01, 2025 8:36 PM IST


