புடி மடானி ரோன்95 (BUDI95) மானியத் திட்டத்தின் முதல் மாதமான அக்டோபரில், 13 மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்கள் மொத்தம் RM800 மில்லியனை சேமித்துள்ளதாக நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. 16.55 மில்லியன் மக்கள் மானிய விலையில் RON95 பெட்ரோலை லிட்டருக்கு RM1.99க்கு பெற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது அரசாங்கத்தின் ஆரம்ப கணிப்பான 15 மில்லியன் பெறுநர்களை விட அதிகமாகும்.
31 அக்டோபர் 2025 நிலவரப்படி, 13.1 மில்லியன் மலேசியர்கள் BUDI95 பரிவர்த்தனைகளைச் செய்துள்ளனர், திட்டத்தின் முதல் மாதத்தில் மொத்தம் 2.66 பில்லியன் ரிங்கிட்டை செலவிட்டனர் என்று அது ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
நிதியமைச்சர் II டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அஸிசான், இந்த முயற்சி நிதிப் பொறுப்பை உறுதி செய்யும் அதே வேளையில் நேரடி நன்மைகளை வழங்குவதில் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார். BUDI95, மக்கள் மானியங்களைப் பெறுவதை உறுதி செய்கிறது, அதே நேரத்தில் அரசாங்கம் சேமிப்புகளை வளர்ச்சி, பொது நலனில் மீண்டும் செலுத்த உதவுகிறது என்று அவர் கூறினார்.
சராசரியாக, தனியார் வாகன பயனர்கள் அக்டோபரில் 98.2 லிட்டர் மானிய விலை எரிபொருளை நிரப்புயுள்ளனர். இது 300 லிட்டர் மாதாந்திர வரம்பை விட மிகக் குறைவு. அதே நேரத்தில் பெறுநர்களில் 0.7 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் ஒதுக்கீட்டை அடைந்துள்ளனர்.
முழுநேர மின்-ஹெய்லிங் ஓட்டுநர்களுக்கான கொடுப்பனவை அரசாங்கம் மாதத்திற்கு 600 லிட்டராக இரட்டிப்பாக்கியது. இதனால் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 58,000 பேர் பயனடைந்தனர். 23,000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாத பதிவுசெய்யப்பட்ட படகு பயனர்கள், குறிப்பாக சபா மற்றும் சரவாக்கில், மானியத்தால் பயனடைந்தவர்களில் அடங்குவர்.
பல அசாதாரண பயன்பாட்டு முறைகளை அது அடையாளம் கண்டுள்ளதாக அமைச்சகம் மேலும் கூறியது. இதில் பெறுநர்கள் குறுகிய காலத்தில் தங்கள் முழு மாதாந்திர ஒதுக்கீட்டை முடித்துக்கொள்வது மற்றும் மலேசியாவின் எல்லைகளுக்கு அருகிலுள்ள நிலையங்களில் மீண்டும் மீண்டும் பெட்ரோல் வாங்குவது ஆகியவை அடங்கும். தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க கண்காணிப்பு கடுமையாக்கப்படும் என்றும், விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1961 இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது கூறியது.




