Last Updated:
Artficial rain | டெல்லியில் செயற்கை மழை முயற்சி தோல்வி அடைந்ததால் பலரும் கவலையடைந்துள்ளனர்.
டெல்லியில் செயற்கை மழை பொழிய வைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
டெல்லியில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில், மேக விதைப்பு மூலம், செயற்கை மழை பொழியச் செய்யும் முயற்சி, தோல்வி அடைந்ததாக கான்பூர் ஐஐடி இயக்குநர் மணிந்திர அகர்வால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், மேகங்கள் மீது ரசாயனங்கள் தெளித்து செயற்கையாக மழை பெய்விக்க ஐஐடி கான்பூருடன் அம்மாநில அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. 5 முயற்சிகள் மூலம் இத்திட்டத்தை சாத்தியப்படுத்த டெல்லி அமைச்சரவையில் 3 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், முதல் முயற்சியாக, சுமார் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில், டெல்லியின் புராரி, விஹார், கரோல் உள்ளிட்ட இடங்களில் மேகங்கள் மீது ரசாயனங்கள் தெளிக்கப்பட்டன. ஆனால், ஈரப்பதம் குறைவாக இருந்ததால், செயற்கை மழை சாத்தியப்படவில்லை என கான்பூர் ஐஐடி இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.
அதே சமயம், மேக விதைப்பு மூலம், காற்று மாசு 6 முதல் 10 விழுக்காடு வரை குறைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இதில் இருந்து கற்றுக் கொண்ட பாடத்தின் மூலம், விரைவில் செயற்கை மழையை சாத்தியப்படுத்துவோம் என ஐஐடி இயக்குநர் மணிந்திர அகர்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
October 30, 2025 9:16 AM IST
ரூ. 1 கோடிக்கும் மேல் செலவு.. மேக விதைப்பு மூலம் செயற்கை மழைக்கு முயற்சி.. தோல்வியடைந்ததால் சோகம்!


