Last Updated:
நேற்று நடந்த இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டி நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இறுதி போட்டியில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இதுவரை இந்திய அணி தான் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றிவாகை சூடியுள்ளது. நடப்பு தொடரில் லீக் சுற்றில் 3 போட்டிகளிலும் சூப்பர் ஃபோர் சுற்றில் 3 போட்டிகளிலும் வென்றுள்ள இந்திய அணி அசுர பலத்துடன் நாளை இறுதி போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
ஏற்கனவே லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றுகளில் நடந்த ஆட்டங்களில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வென்றிருப்பதால் நாளைய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானின் சவால்களை எளிதாக எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் நேற்று நடந்த இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சேசிங் செய்த இலங்கை அணி 202 ரன்கள் வரை எடுத்து டிரா செய்தது.
இருப்பினும் சூப்பர் ஓவர் போட்டியில் இலங்கை அணி தோல்வியை தழுவியது. இந்த போட்டியின் போது இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் நலமுடன் இருக்கிறாரா என்பது குறித்த தகவல் ஏதும் வெளிவரவில்லை.
ஹர்திக் பாண்டியாவுக்கு இடது கால் தொடையில் காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று ஆட்டம் முடிவதற்கு முன்பாக அவர் அசவுகரியத்துடன் மைதானத்தில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இந்நிலையில் நாளைய ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா விளையாடுவாரா என்பது உறுதி செய்யப்படாமல் இருப்பதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
September 27, 2025 4:36 PM IST


