Last Updated:
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் 2-1 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட முதல் டி20 போட்டி இன்று தொடங்கியது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அதிரடியாக விளையாடி வந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் 2-1 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட முதல் டி20 போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழையின் காரணமாக போட்டி தாமதாக ஆரம்பிக்கப்பட்டதால் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இந்திய அணியில் அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அபிஷேக் சர்மா 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நாதன் எலிஷ் பந்துவீச்சில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி அணியின் ரன்ரேட்டை உயர்த்தினர்.
இந்நிலையில் இந்திய அணி 9.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்திருந்த போது மழை மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. சுப்மன் கில் 37 ரன்கள் உடனும் சூர்யகுமார் யாதவ் 39 ரன்களும் அடித்து இருந்தனர். மழை தீவரமாக பெய்த காரணத்தால் மைதானத்தில் ஈரப்பதம் அதிகரித்தது. இதன் காரணமாக ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
October 29, 2025 4:27 PM IST


