Last Updated:
PM Kisan Diwali Payment | தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த பண்டிகைக்கு முன்னதாக நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான விவசாயிகளுக்கு நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின்கீழ் 21-வது தவணையாக ரூ.2,000 பணமானது தீபாவளிக்குள் விவசாயிகளின் பேங்க் அக்கவுன்ட்களுக்கு வந்து சேர்ந்துவிடும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஜம்மு & காஷ்மீர், பஞ்சாப், உத்தராகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பிஎம் கிசான் திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு மத்திய அரசு ரூ.2000 ஏற்கனவே செலுத்த தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தப் பகுதிகளில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் விவசாயிகளுக்கு குறிப்பிடத்தக்க இழப்பை ஏற்படுத்தியது, எனவே, மத்திய அரசு நிவாரணமாக முன்கூட்டியே தவணையை அனுப்பியது. இப்போது, பிற மாநிலங்களில் உள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பிரதமர் கிசான் யோஜனாவின் 21-வது தவணை தீபாவளிக்கு முன்பு வந்து சேரும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கடந்த ஆண்டு, இந்த தொகை அக்டோபர் முதல் வாரத்தில் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை, இதுவரை ஒரு சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மட்டுமே இந்த தவணையைப் பெற்றுள்ளனர். இந்த பணத்தை உரிய நேரத்திற்குள் பெற மற்றும் தாமதங்களைத் தவிர்க்க விவசாயிகள் தங்கள் e-KYC செயல்முறையை முழுமையாக முடிக்க வேண்டும் மற்றும் தங்களின் அக்கவுன்ட் விவரங்கள் துல்லியமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
PM-KISAN e-KYC-ஐ முடிப்பதற்கான வழிமுறைகள்:
1. ஆன்லைனில் OTP வழியே:
- முதலில் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான pmkisan.gov.in-க்கு சென்று ‘Farmers Corner’ பின்னர் ‘e-KYC’ ஆப்ஷனுக்கு செல்லவும்.
- உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணையும், அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரையும் என்டர் செய்யவும்.
- பிறகு ‘Get OTP’ என்பதை கிளிக் செய்து, மொபைல் நம்பருக்கு வரும் OTP-ஐ என்டர் செய்து சப்மிட் செய்யவும்.
- இதனை தொடர்ந்து e-KYC 24 மணி நேரத்திற்குள் புதுப்பிக்கப்படும்.
2. PM-KISAN ஆப் மூலம் முக அங்கீகாரம்:
- PM-KISAN மொபைல் ஆப் மற்றும் Aadhaar Face RD ஆப்-ஐ டவுன்லோட் செய்யவும்.
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை பயன்படுத்தி Sign in செய்து கொள்ளவும். பின் Beneficiary Status என்ற ஆப்ஷன் சென்று அதில் e-KYC-க்கு செல்லவும்.
- ஆதார் நம்பரை என்டர் செய்து ‘Face Authentication’ என்பதை தேர்ந்தெடுக்கவும்.
- மொபைல் கேமராவைப் பயன்படுத்தி உங்கள் முகத்தை ஸ்கேன் செய்யுங்கள்; வெற்றிகரமான சரிபார்ப்பு மூலம் e-KYC-ஐ நிறைவு செய்ய முடியும்.
e-KYC-ஐ பூர்த்தி செய்து தங்கள் கணக்கு விவரங்களை சரிபார்க்கும் விவசாயிகளுக்கு 21-ஆம் தவணை சரியான நேரத்தில் கிடைக்கும். தகவல்களை துல்லியமாக வைத்திருப்பது ரூ.2,000 நன்மையை நேரடியாக வங்கிக் கணக்குகளுக்கு எளிதாக மாற்றுவதை உறுதி செய்கிறது.
- விவசாயிகள் தங்கள் மொபைல் நம்பர், ஆதார் மற்றும் உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- நில பதிவுகளை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.
- வங்கிக் கணக்கு ஆக்டிவாக உள்ளதா என்பதையும், ஆதாருடன் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்க்கவும்.
October 15, 2025 5:51 PM IST
PM Kisan Diwali Payment | பி.எம்.கிசான் தீபாவளி பரிசு… விவசாயிகளுக்கு பண்டிகை மகிழ்ச்சியை தரும் திட்டம்…!


