இளவரசர் திபேந்திராவின் தாய் அரசி ஐஸ்வர்யா (Aishwarya), திபேந்திராவின் இளைய சகோதரர் நிரஞ்சன் (Prince Nirajan), திபேந்திராவின் தங்கை சுருதி (Princess Shruti Shah), மன்னர் பிரேந்திராவின் சகோதரர் தீரேந்திரா (Prince Dhirendra), திபேந்திராவின் மாமா காட்கா (Prince Khadga Shah), திபேந்திராவின் அத்தைகள் சாரதா, சாந்தி, ஜெயந்தி ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தனர். அந்த இரவு காத்மாண்டு அரண்மனையில், ரத்த வெள்ளம் ஓடியதாக நேரில் பார்த்தவர்கள் சாட்சி அளித்திருந்தனர்.


